Daily Quran
--------
Visitors
Free counters!
http://lankaenews.lk/image/dewaena.gif
நோன்பாளிகளே உங்களைத்தான்! - August 16, 2010 by MediaVoice

நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்களை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

  • 2, 3 மணிக்கு ‘ஸஹர்’ செய்துவிட்டு அப்படியே உறங்குவது! இதன் மூலம் ஸஹரைப் பிற்படுத்துதல் என்ற சுன்னா விடுபடுவதுடன், சிலவேளை சுபஹுத் தொழுகை கூட தவறிவிடும் நிலை ஏற்படுகின்றது.

  • சிலர் சுபஹுக்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்னர் ‘ஸஹர்’ செய்தாலும், அதான் கூறும் வரை கொஞ்சம் சாய்ந்து கொள்வோம் என சாய்ந்தால், காலை 8, 9 மணிக்குத்தான் விழிக்கின்றனர். இதனால், ‘சுபஹ்’ தவறிவிடும் தவறு நேரிடுகின்றது! எனவே ஸஹரை  ‘சுபஹ்’ நெருங்கும் நேரம் வரை தாமதிப்போமாக!

  • உண்ணல், பருகலில் எல்லை மீறி அளவு கடந்து ஈடுபடுதல். சிலர் நோன்பு காலத்தில் ஏனைய காலங்களைவிட அதிகமாகவே உண்கின்றனர்.அதிகம் உண்ணுவது அல்லாஹ் விரும்பாத செயலாகும்.

  • ழூ ‘லுஹர்’, ‘அஸர்’ போன்ற தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதில் சடைவு காட்டல், உறக்கம் அல்லது சோம்பல் போன்ற காரணங்களால் இது நிகழலாம்! இதைத் தவிர்க்க வேண்டும்.

  • புறம் பேசுதல், அடுத்தவர் குறை பேசுதல், வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகள், அடுத் தவரைக் குழப்புவதற்காகப் பொய் உரைத்தல் போன்ற தவறான நடத்தைகளை விட்டும் விலகா திருப்பது நோன்பின் பலனை அழித்தவிடும்.

  • ‘ரமழான்’ எனும் புனித மாதத்தின் கண்ணியமான நேரங்களை வீண் விளையாட்டுக்களில் கழித்தல். குறிப்பாக ‘ரமழான்’ இரவுகளில் விளையாட்டுக்காக விழித்திருத்தல், பாதையோரங்களில் விளையாடுதல், இதன் மூலம் பிறருக்குத் தொல்லை கொடுத்தல் நோன்பின் கூலிகளை வீணாக்கிவிடும்.

  • ‘துஆ’, ‘திக்ர்’, ‘குர்ஆன்’ ஓதுதல், ‘நபிலான, சுன்னத்’தான தொழுகைகளைக் கடைபிடித்தல் என்பவற்றில் பொடுபோக்குக் காட்டுதல் ஒரு நோன்பாளியிடம் இருக்கக் கூடாது.

  • ‘கியாமுல் லைல்’ தொழுகையில் பொடு போக்குக் காடடுவது ரமழானில் கிடைக்கவிருக்கும் பாக்கியங்களை விட்டும் தூரமாக்கிவிடும்.

  • ‘ரமழான்’ இறுதிப் பத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வணக்க வழிபாடுகளில் ஈடு படவேண்டும் என்றிருக்க, அதை பெருநாள் ஏற்பாட்டில் கழித்து பாழாக்கிவிடல்.

  • ‘ரமழான்’ மாதத்தில் ஆரம்பத்தில் அதிக தொழுகையாளிகளையும், இபாதத்தாளிகளையும் காணலாம். ஆனால், நாள் செல்லச் செல்ல சோம்பல் அதிகரித்து இபாதத்தாளிகளின் எண்ணிக்கை குறைவதைக் காணலாம்! எனவே, இறுதிப்பத்து கூடுதல் முக்கியத்துவம் கொடுக் கப்பட வேண்டியது என்பதைக் கவனத்தில் கொண்டு செயற்படுவோமாக!

  • சிலர் இரவு பூராக இபாதத்தில் ஈடுபட்டுவிட்டு ‘சுபஹ்’ த்தொழுகையை தவறவிட்டு விடுகின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

  • ‘ரமழானி’ல் தர்மம் செய்வது ஊக்குவிக்கப்பட்டுள்ளது. எனினும், வசதியுள்ள பலரும் இதில் கஞ்சத்தனம் செய்கின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

  • ‘ஸஹரு’டைய நேரம் ‘துஆ’வுக்கும், பாவ மன்னிப்புக்கும் ஏற்றதாக இருக்கும்போது, ‘இப் தாரு’டைய நேரம் ‘துஆ’வுக்குரியதாக இருக்கும் போது, இவ்விரு நேரங்களையும் உண்பதற் கும், பருகுவதற்குமுரிய நேரமாக மட்டும் கருதி ‘துஆ’, ‘இஸ்திஃபார்’ விடயத்தில் அலட்சியமாக இருத்தல்.

  • பள்ளிக்குச் செல்லும் பெண்கள் அலங்கார ஆடைகளுடனும், வாசனைத் திரவியங்கள் பூசிக் கொண்டும் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் பெண்கள் மனம் பூசிக்கொண்டு பள்ளிக்கு வருவதை தடுத்துள்ளார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

  • ‘ஸகாதுல் பித்ரை’ மிகவும் முற்படுத்துதல், ‘பித்ரா’வின் பெயரில் பிச்சைக்கார சமூகத்தை உருவாக்குதல், வீடுதேடி வருபவர்களுக்கு சில்லறைகளை மாற்றி வைத்து வழங்கிவிட்டு ‘ஸகாத்’ கொடுத்து விட்டதாக எண்ணிக் கொள்ளல் தண்டணைக்குரிய குற்றமாகும்.

  • எமது சமூகத்தவர்களில் பலர் புகைத்தல் எனும் தீய பழக்கத்திற்குள்ளாகியுள்ளனர். புகைத்தலை விட்டும் விலக ரமழானே சிறந்த வாய்ப்பாகும். சுமார் 14 மணி நேரம் புகைத்தலை விட்டும் விலகியிருக்கும் எமது சகோதரர்கள் நோன்பு திறந்ததும் பகலில் குடிக்காத சிகரட்டுக்களையும் சேர்த்தே குடித்து விடுகின்றனர். இப்பழக்கத்தைக் கைவிட நோன்பைச் சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அதை அப்படியே விட்டு விட அனைவரும் உறுதி கொள்ள வேண்டும். புகைத்தல் ஹராமானது என்பது இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்த முடிவு என்பதைக் கவனத்தில் கொள்வோமாக!

இவ்வாறான எமது குறைபாடுகளைக்களைந்து இந்த ‘ரமழானை’த் தூய முறையில் கழிக்க முனைவோமாக!

புனித அல்குர்ஆனின் அடிப்படையிலான வாழ்க்கையே மிகச்சிறந்த வாழ்க்கை – கஹடோவிட ஓகொடபொல பள்ளிவாசல்கள் சம்மேளன அங்குரார்ப்பணக் கூட்டத்தில் பொலிஸ் அதிகாரி தெரிவிப்பு AUG 9, 2010 - August 14, 2010 by MediaVoice
கடந்த பல மாதங்களாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய கஹடோவிட ஓகொடபொல பள்ளிவாசல்கள் சம்மேளனம் நேற்று (2010.08.08) அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப் பட்டது.
இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வீரங்குல பொலிஸ் நிலைய சார்ஜன்ட் திரு. ஆரியரத்ன அவர்கள் புனித அல்குர்ஆனின் அடிப்படையிலான வாழ்க்கையே மிகச்சிறந்த வாழ்க்கை எனக் குறிப்பட்டார். உலகில் வாழ்கின்ற மக்களில் தாம் ஏற்றுக் கொண்ட மதத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்படுகின்றவர்களில் அதிகமான விகிதாசாரத்தினர் முஸ்லிம்களே. அறியாமைக்கால அரேபியாவில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பல தெய்வ வழிபாடு கோத்திர வெறி கொலை கொள்ளை உள்ளிட்ட பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் பார்த்த முஹம்மத் நபியவர்கள் அவை பற்றி கவலை கொண்டவர்களாக குகையொன்றினுள் தன்னந்தனியாக இருந்து சிந்தித்தவர்களாக இருந்தார்கள். உலக மக்களுக்கு நேரான வழியைக் காட்டுவதறகாக முஹம்மத் நபியவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்து புனித குர்ஆனை ஜிப்ரீல் (அலை) மூலமாக வழங்கினான். அந்த புனித வேதத்தில் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் அடங்கியுள்ளன. அதற்கு இணையாக உலகில் எந்தப் புத்தகமும் கிடையாது. ஏவ்வளவு பெரிய பேரரிஞராக இருப்பினும் இது போன்ற வழிகாட்டலை வழங்க முடியாது. அதிலே கடவுளை வணங்க வேண்டிய முறை உணவு உட்கொள்ள வேண்டிய முறை குடும்பம் நடத்துகின்ற முறை பணம் சம்பாதிக்கின்ற முறை என வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விடயங்களும் அமைந்துள்ளன. இந்த சம்மேளன அறிமுகம் பற்றி முன்னால் பேசிய சகோதரர் குறிப்பிட்ட விடயங்கள் கவலை அளிக்கின்றது. தீய செயல்களின் பக்கமும் ஒழுக்கயீனங்களின் பக்கமும் முஸ்லிம்கள் செல்கின்ற நிலை பற்றி அவர் குறிப்பிட்டார். இவ்வளவு அற்புதமான ஒரு வேதத்தைக் கையில் வைத்துக் கொண்டு இவ்வாறான நிலைக்க முஸ்லிம்கள் செல்வது கவலையாகவும் வேதனையாகவும் இருக்கின்றது என்றார். கலாநிதி நபீஸ அவர்கள் கல்வியின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரையாற்றினார்.
நிட்டம்புவ பொலிஸ் அதிகாரிகளும் கம்பஹா உதவித் தேர்தல் அணையாளர் ஜனாப் மொஹமட்அவர்களும் இங்கு உரையாற்றியதோடு சம்மேளனம் பற்றிய சுருக்கமான அறிமுக உரையை சகோதரர் ஜவ்ஸி நிகழ்த்தினார். பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் ஊர் ஜமாஅத்தார்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஏற்பாட்டாளர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியைப் பார்க்கும் போது பங்கு பற்றியோரின் தொகை திருப்திப்படக் கூடியதாக இருக்கவில்லை. எவ்வாறாயினும் இந்த ஆரம்பம் சிறந்த எதிர்காலத்தை நோக்கிய பயணமாக அமைய நாம் பிரார்த்திக்கின்றோம்

கடந்த பல மாதங்களாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய கஹடோவிட ஓகொடபொல பள்ளிவாசல்கள் சம்மேளனம் நேற்று (2010.08.08) அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப் பட்டது.  இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வீரங்குல பொலிஸ் நிலைய சார்ஜன்ட் திரு. ஆரியரத்ன அவர்கள் புனித அல்குர்ஆனின் அடிப்படையிலான வாழ்க்கையே மிகச்சிறந்த வாழ்க்கை எனக் குறிப்பட்டார். உலகில் வாழ்கின்ற மக்களில் தாம் ஏற்றுக் கொண்ட மதத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்படுகின்றவர்களில் அதிகமான விகிதாசாரத்தினர் முஸ்லிம்களே. அறியாமைக்கால அரேபியாவில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பல தெய்வ வழிபாடு கோத்திர வெறி கொலை கொள்ளை உள்ளிட்ட பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் பார்த்த முஹம்மத் நபியவர்கள் அவை பற்றி கவலை கொண்டவர்களாக குகையொன்றினுள் தன்னந்தனியாக இருந்து சிந்தித்தவர்களாக இருந்தார்கள். உலக மக்களுக்கு நேரான வழியைக் காட்டுவதறகாக முஹம்மத் நபியவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்து புனித குர்ஆனை ஜிப்ரீல் (அலை) மூலமாக வழங்கினான். அந்த புனித வேதத்தில் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் அடங்கியுள்ளன. அதற்கு இணையாக உலகில் எந்தப் புத்தகமும் கிடையாது. ஏவ்வளவு பெரிய பேரரிஞராக இருப்பினும் இது போன்ற வழிகாட்டலை வழங்க முடியாது. அதிலே கடவுளை வணங்க வேண்டிய முறை உணவு உட்கொள்ள வேண்டிய முறை குடும்பம் நடத்துகின்ற முறை பணம் சம்பாதிக்கின்ற முறை என வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விடயங்களும் அமைந்துள்ளன. இந்த சம்மேளன அறிமுகம் பற்றி முன்னால் பேசிய சகோதரர் குறிப்பிட்ட விடயங்கள் கவலை அளிக்கின்றது. தீய செயல்களின் பக்கமும் ஒழுக்கயீனங்களின் பக்கமும் முஸ்லிம்கள் செல்கின்ற நிலை பற்றி அவர் குறிப்பிட்டார். இவ்வளவு அற்புதமான ஒரு வேதத்தைக் கையில் வைத்துக் கொண்டு இவ்வாறான நிலைக்க முஸ்லிம்கள் செல்வது கவலையாகவும் வேதனையாகவும் இருக்கின்றது என்றார். கலாநிதி நபீஸ அவர்கள் கல்வியின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரையாற்றினார்.

நிட்டம்புவ பொலிஸ் அதிகாரிகளும் கம்பஹா உதவித் தேர்தல் அணையாளர் ஜனாப் மொஹமட்அவர்களும் இங்கு உரையாற்றியதோடு சம்மேளனம் பற்றிய சுருக்கமான அறிமுக உரையை சகோதரர் ஜவ்ஸி நிகழ்த்தினார். பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் ஊர் ஜமாஅத்தார்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  ஏற்பாட்டாளர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியைப் பார்க்கும் போது பங்கு பற்றியோரின் தொகை திருப்திப்படக் கூடியதாக இருக்கவில்லை.எவ்வாறாயினும் இந்த ஆரம்பம் சிறந்த எதிர்காலத்தை நோக்கிய பயணமாக அமைய நாம் பிரார்த்திக்கின்றோம்

ஜனாஸா அறிவித்தல் - July 23, 2010 by admin
ஓகொடபொளையைச் சேர்ந்த அமீர் ஹம்ஸா காலமானார். அன்னார் தாஜூல் இனாயாவின் கணவரும் பாத்திமா ராபியாவின் தந்தையும் பாரூக், காலஞ்சென்றவர்களான ஹாரிஸ், தாஸிம், நூர் ஹம்ஸியா ஆகியோரின் சகோதரரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று (2010.07.23) பி.ப. 4.00 மணிக்கு ஓகொடபொளை மஸ்ஜிதுல் பலாஹ் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் -2 - July 23, 2010 by admin

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْن

எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! 2:286
ஜனாஸா அறிவித்தல் - July 21, 2010 by admin

ஓகொடபொளையைச் சேர்ந்த ஐனுல் ஆபிதா காலமானார். அன்னார் காலஞ்சென்ற முகைதீனின் மனைவியும் பாத்திமா சஹ்தியா சம்சுன் நிஹாரா கமருன் நிஸா சித்தி ஸரீனா பஹ்மி (முன்னாள் விமானப்படை வீரர்) நிஸார் ஆகியோரின் தந்தையும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நேற்று (2010.07.20) இரவு 10.00 மணியளவில் மஸ்ஜிதுன்னூர் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் - July 19, 2010 by admin

அன்புள்ள வாசகர்களே

உலகில் பிறந்த மனிதன் பல்வேறு விதமான தேவைகளை உடையவனாக இருக்கின்றான். மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் தனது தேவைகளை மழுமையாக பெற்றுக் கொள்ள முடிவதில்லை. அது மட்டுமன்றி மனிதனது எல்லையில்லாத ஆசை என்ற பலவீனத்தைப் பயன்படுத்தி ஷைத்தான் மனிதனை தவறான வழியில் இட்டுச் செல்லவும் முயற்சி செய்கின்றான்.
எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இஸ்லாம் அனுமதித்த வழிகளில் நாம் முயற்சி செய்வதோடு அதிகமாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது அவசியமாகும். அல்லாஹ்வும் நபி(ஸல்) அவர்களும் எமக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் பல விதமான பிரார்த்தனைகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.
பிரார்த்தனை ஒரு அமலாகும். பிரார்த்தனைகளை ஏற்று அல்லாஹ் எமது தேவைகளை நிறைவேற்றுவதோடு பிரார்த்தனை செய்தமைக்காக பிரத்தியேகமான நன்மைகளையும் அள்ளி வழங்குகின்றான்.
ஏம்மில் அதிகமானோர் அல்குர்அனில் இடம்பெற்றுள்ள மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகளை அறியாமல் இருக்கின்றார்கள். இவற்றை நாம் அறிந்து அதனடிப்படையில் பிரார்த்தனை செய்யும் போது எம் வாழ்வில் அல்லாஹ்வின் அருள் பொழிவது நிச்சயம்.
எனவே நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள் என்ற “லேபலின்” கீழ் அல்குர்அனிலும் ஹதீஸிலும் இடம் பெற்றுள்ள பிரார்த்தனைகளைத் தொகுத்துத் தர எண்ணியுள்ளோம். எமது தளம் மிக விரைவில் புதுப்பொலிவுடன் தோற்றமளிக்கும் போது இப்பிரார்த்தனைகள் தனியான பகுதியாக இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்.

குர்ஆனிலிருந்து..
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201

ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக் கூடாதவைகளும் - July 15, 2010 by Media Voice Of Kahatowita
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகிற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையை பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.

ஷஃபான் மாதம் என்பது சந்திர மாத கணக்கின்படி எட்டாவது மாதமாகும், இன்னும் ரமழானுக்கு முன்னுள்ள மாதமாகும். இந்த வெளியிட்டீன் மூலம் ஷஃபான் மாத சிறப்புகளையும், இன்னும் ஷஃபான் மாதத்தில் அரங்கேற்றப்படும் ஓர் சில வழிகேடான பித்அத்துகளையும் தெளிவுபடுத்துவது தான் நமது நோக்கம்.

ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கு ஆதாரமாக உள்ள ஹதீஸ்கள்:

عَنْ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ (متفق عليه).

நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். நோன்பு வைக்கவில்லை என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைக்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமழானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் பார்க்கவில்லை. நபியவர்கள் அதிகம் நோன்பு வைத்த மாதம் ஷஃபானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ سَمِعَ عَائِشَةَ تَقُولُ كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَصُومَهُ شَعْبَانُ ثُمَّ يَصِلُهُ بِرَمَضَانَ (أبوداود, نسائي).

நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும், அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் செவிமடுத்தாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவுத், நஸாயி).

ஷஃபானில் அமல்கள் உயர்த்தப்படுகின்றன:

قَالَ حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْمَقْبُرِيُّ قَالَ حَدَّثَنِي أُسَامَةُ ابْنُ زَيْدٍ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ قَالَ ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ (نسائيஇ أحمد).

உஸாமதிப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்ளிடம்: அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போதுஇ நபியவர்கள்: மனிதர்கள் ரஜப்இ ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். (ஆதாரம்: நஸாயிஇ அஹ்மத்).

عَنْ أَبِي سَلَمَةَ أَنَّ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا حَدَّثَتْهُ قَالَتْ لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرًا أَكْثَرَ مِنْ شَعْبَانَ فَإِنَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ وَكَانَ يَقُولُ خُذُوا مِنَ الْعَمَلِ مَا تُطِيقُونَ فَإِنَّ اللَّهَ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّوا وَأَحَبُّ الصَّلَاةِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ مَا دُووِمَ عَلَيْهِ وَإِنْ قَلَّتْ وَكَانَ إِذَا صَلَّى صَلَاةً دَاوَمَ عَلَيْهَا ழூ (متفق عليه).

நபியவர்கள் ஷஃபான் மாதத்தை போன்று வேறொரு மாதத்தில் அதிகம் நோன்பு நோற்கவில்லை. ஷஃபானில் அதிகம் நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். இன்னும் நபியவர்கள்: உங்களுக்கு முடியுமான வணக்க வழிபாடுகளை செய்யுங்கள், நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடைவதில்லை என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். குறைவான வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து செய்து வருவதுதான் நபியவர்களுக்கு விருப்பமாக இருந்தது.     நபியவர்கள் தொழுவார்கள் என்றால், தொடர்ந்து அதை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள். (முத்தபகுன் அலைஹி).

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் ஷஃபான் மாதத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் அதிகம் நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாகும். எனவே நாமும் நபியவர்களின் இந்த நடைமுறையை செயல்படுத்துவோம். அதன் மூலம் ரமழான் மாத நோன்புக்கும் ஒரு பயிற்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நபியவர்கள் குறிப்பிட்டது போல் ஷஃபான் மாத விஷயத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் பாராமுகமாகத் தான் இருக்கிறார்கள். அல்லாஹ்விடத்தில் அமல்கள் உயர்த்தப்படுகின்ற இம்மாதத்தில் நாமும் அதிகம் நோன்பு வைப்பதற்கு முனைவோம்.

விடுபட்ட நோன்புகளை நோற்றல்:

عن أبي سلمة قال : سمعت عائشة – رضي الله عنها – تقول : (( كان يكون علي الصوم من رمضان ، فما استطيع أن أقضيه إلا في شعبان (متفق عليه).

‘எனக்கு ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை ஷஃபானில் தவிர நிறைவேற்ற முடிவதில்லை’ என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

விடுபட்ட ரமழான் மாத நோன்பை ஷஃபான் வரை பிற்படுத்துவதற்கு இந்த செய்தியிலிருந்து அனுமதி கிடைக்கிறது என்பதை அறியமுடிகிறது. மார்க்கம் கூறிய காரணங்களுக்காக ஒருவர் நோன்பை விடும் போது அல்லது குறிப்பாக பெண்கள் மாத விடாய், பிள்ளைப் பேறு ஆகியவைகளின் மூலம் நோன்பை விடும்போது, அதனை ஏனைய காலங்களில் நோற்க வேண்டும்.

ரமழானுக்கு ஒரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நோன்பு நோற்பது தடை:

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ إِلَّا أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ فَلْيَصُمْ ذَلِكَ الْيَوْمَ (البخاري, ومسلم).

‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி, முஸ்லிம்).

உதாரணமாக: திங்கள், வியாழன் வழமையாக நோன்பு வைக்கும் ஒருவர், ரமழானுக்கு முந்தியுள்ள ஓரிரு நாட்கள் திங்கள் அல்லது வியாழனாக அமையுமானால் அவருக்கு நோன்பு நோற்பதற்கு அனுமதியுள்ளது என்பதை மேற்கூறிய ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.

ஷஃபானின் 15 வது தினத்தை சிறப்பிப்பது வழிகேடான பித்அத்தாகும்:

‘நிச்சயமாக நாம் அதனை (அல்குர்ஆனை) பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம், நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக் கப்படுகிறது.’ (அத்துகான் 44: 3,4).

இவ்வசனத்தில் அல்லாஹ் ‘அருள் நிறைந்த இரவில்’ அல்குர்ஆனை இறக்கியதாகவும், அந்த இரவில் மனிதனின் வாழ்வாதரங்களுடன் தொடர்புபட்ட விஷயங்களை தீர்மானிப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் அருள் நிறைந்த இரவு என்பது ஷஃபானின் 15 வது இரவாகும் என்று சிலர் வாதிக்கின்றனர். இது நேரடியாகவே குர்ஆனுடன் மோதக்கூடிய ஒரு வாதம் என்பதை ஏனோ அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர்.

அல்லாஹ் புனிதமிக்க அல்குர்ஆனில் மற்றுமோர் இடத்தில்: ‘ரமழான் மாதம் எத்தகையது எனில் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய அல்குர்ஆனை நாம் அருளினோம்’. (2: 185).

மற்றுமோர் இடத்தில்: ‘லைலதுல் கத்ர் இரவில் நாம் இதை (அல்குர்ஆனை) அருளினோம்’ என குறிப்பிடுகிறான். எனவே அத்துகான் அத்தியாயத்தில் இடம் பெற்ற ‘அருள் நிறைந்த இரவு’ என்பது ரமழான் மாதத்தின் லைலதுல் கத்ர் இரவு தான் என்பதை அல்குர்ஆனின் ஏனைய வசனங்களையும் பார்க்கும் போது தெளிவாக விளங்க முடிகிறது. எனவே இவர்களில் கூறுவது போன்று ஷஃபானின் 15 வது இரவுக்கும் இதற்கும் மத்தியில் எந்த தொடர்பும் இல்லை.

ஷஃபானின் 15 வது இரவை ‘பராஅத்’ என்று கூறி அந்த இரவை புனிதப்படுத்துவதும், அதன் பகல் காலத்தில் நோன்பு நோற்பதும், மூன்று யாசீன்கள் ஓதி ரொட்டி போன்ற உணவு வகைகளை தயாரித்து பகிர்ந்தளிப்பதும் இந்த நாளில் செய்யப்படும் தெளிவான பித்அத்துகளாகும். மார்க்கத்தில் இவைகளுக்கு எந்த அடிப்படையுமில்லை.

பித்அத்துகள் அனைத்தும் தெளிவான வழீகேடு என்பது நபியவர்களின் கூற்று என்பதை உணர்ந்து இவ்வாறான பித்அத்துகளை விட்டு விழகி இருப்பதுடன், ஏனையவர்களையும் தடுப்போமாக.

ஷஃபானின் 15 வது இரவுடன் தொடர்பு படுத்தி சில புணைந்துரைக்கப்பட்ட செய்திகளும் இருக்கின்றன அவைகளையும் இங்கு குறிப்பிடுவது பொறுத்தமென நினைக்கிறேன்.

قوله صلى الله عليه وسلم : (( رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي…….)).

‘ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

قوله صلى الله عليه وسلم:((من صلى ليلة النصف من شعبان ثنتي عشرة ركعة، يقرأ في كل ركعة((قل هو الله أحد)) ثلاثين مرة ، لم يخرج حتى يرى مقعده من الجنة..

‘ஷஃபானின் 15 வது இரவில் எவர் 12 ரக்அத்துகளை தொழுது, அதன் ஒவ்வொரு ரக்அத்திலும் இஹ்லாஸ் அத்தியாயத்தை 30 தடவை ஓதவாரோ, சுவர்க்கத்தில் அவர் தங்கும் இடத்தை பார்க்காமல் அங்கிருந்து வெளியேற மாட்டார்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இச்செய்திகள் அனைத்தும் நபியின் பெயரால் புணைந்துரைக்கப்பட்ட வைகளாகும். இவைகளை இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் தனது ‘மவ்லூஆத்’ என்ற கிரந்தத்தில் குறிப்பிடுகிறார். இவைகளை விட்டு நாம் எச்சரிக்கையாக இருப்பது கட்டாயமாகும்.

பாலிகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச்சங்க பொதுக் கூட்டம் - July 14, 2010 by Media Voice Of Kahatowita
கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 2010.07.25 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிபர் புஹாரி உடயார் தலைமையில் நடைபெற்ற போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 
கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்பாடசாலையின் அபிவிருத்திச் சங்கப் பொதுக் கூட்டம் கூட்டப்படாமல் இருந்த அதே வேளை புதிய அதிபர் நியமனம் பெற்ற பின்னர் பொதுக் கூட்டத்தைக் கூட்டுமாறு பெற்றோர்களில் சிலரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் பாடசாலையை ஒரு ஸ்திர நிலைக்குக் கொண்டு வரும் வரை காலதாமதம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
நிர்வாகக்குழுக் கூட்டத்தின் போது பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டதாகவும் பாடசாலையின் முன்னேற்றத்துக்கு பெற்றோரதும் பொது மக்களதும் அதிகளவு ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ஜனாஸா அறிவித்தல் - July 8, 2010 by Media Voice Of Kahatowita
கஹடோவிட அஹமட் விலேஜ் (சாரலங்கா) வைச் சேர்ந்த அப்துல் ரவூப் காலமானார். அன்னார் சித்தி நயீமாவின் கணவரும் மொஹமட் அலி ,மொஹமட் நவாஸ், கலீலுர்ரஹ்மான் ,சித்தி சமீமா ஆகியோரின் தந்தையும் பாரூக்கின் மைத்துனரும் ஆவார்.   ஜனாஸா நல்லடக்கம் இன்று (2010.07.08) பி.ப. 4.00 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் இடம் பெறும்

- July 6, 2010 by Media Voice Of Kahatowita
அன்புள்ள வாசகர்களே!
கஹடோவிடவின் முன்னோடி இணையத்தளமான எமதுதளம் வெகுவிரைவில் உரிய தராதரத்துடனும் புதுப்பொலிவுடனும் தோற்றமளிக்கும், இன்ஷா அல்லாஹ்!

« old Postsnew Posts »ogtzuq
Daily hadees
------
Recent Comments