Daily Quran
--------
Visitors
Free counters!
http://lankaenews.lk/image/dewaena.gif
Month: May 2010
உம்மு குலூத் காலமானார் - May 27, 2010 by Media Voice Of Kahatowita

ஒகொடபொலயை சேர்ந்த உம்மு குலூத் காலமானார். அன்னார் காலஞ் சென்ற  யூசுப் அவர்களின் மனைவி.யும் ஜலீல் (பாஸ்) ஜாபிர் அலீமா நைமா ஆகியோரின் தாயாரும் முனீர் (ஆசிரியர்) பாஹிம் ஆகியோரின் வாப்பும்மாவும் ஆவார்.அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (27.5.2010) 4 மணிக்கு மஸ்ஜிதுந் நூர் பள்ளிவாயல் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும் இன்சா அல்லாஹ்

மைலோ கிண்ண உதைபந்தாட்டம் – அல் பத்ரியா மாவட்டச் செம்பியன் - May 25, 2010 by Media Voice Of Kahatowita
மைலோ கிண்ணத்திற்காக நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் உதைபந்தாட்ச் சுற்றுப் பபொட்டியில் 17 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கான பிரிவில் அல் பத்ரியா சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானமோ  வேறு வசதிகளோ இல்லாமல் இம்மாணவர்கள் மாவட்ட சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டமை வரவேற்கத் தக்கதாகும். என்றாலம் பாடசாலை நிர்வாகம் இந்த மாணவர்களை சரியான மறையில் நெறிப்படுத்தினார்களா என்பது கேள்விக் குறியே. இம்முறை க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள இம்மாணவர்கள் அதி கூடிய காலத்தை இந்த விளையாட்டக்காhச் செலவு செய்தமையும் இன்று வரை அதன் பெருமை பேசிக் கொள்வதிலுமே காலத்தைக் கழித்து வருவதும் கவலைக்குரியது.  40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இந்த வகுப்பில் விளையாடுகின்ற மாணவர்களைத் தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்கு கல்வியைத் தொடர்வதற்காதன சூழலை பாடசாலை நிர்வாகம் ஏற்படுத்திக் கொடக்கவில்லை என பல பெற்றோர்கள் கவலைப் படுகின்றனர். மாவட்டச் சம்பியன் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு பாடசாலை நேரத்தில் ஊருக்குள் ஊர்வலம் சென்றமையும் ஊர்மக்கள் மத்தியல் பரவலாக கவலையுடன் பேசப்படுகின்றது.இந்நிலையில் எஞ்சியிருக்கின்ற சில மாதங்களையாவது இம்மாணவர்கள் கல்விக்காச் செலவிட்டு பரீட்சையில் சித்திபெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் ஆசிரியர்களும் பெற்றோரும் மிகவும் அக்கறையுடன் இம்மாணவர்கள் வடயத்தில் செயற்படுவது இன்றியமையாததாகும்.
இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம்! - May 25, 2010 by Media Voice Of Kahatowita
இஸ்லாம் ஏனைய மதங்களைப் போலல்லாமல் சகோதரத்துவத்தை அதிகமாக வலியுறுத்துகின்றது. அதற்கென இருக்கின்ற வழிகாட்டல்களை தெளிவாக விளக்குகின்றது. சகோதரத்துவத்திதை இல்லாமல் ஆக்குகின்ற அல்லது அதற்கு களங்கம் ஏற்படுத்துகின்ற அனைத்து வழிகளையும் முற்றாக தடை செய்திருப்பதோடு அதை மீறி செயல்படுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு எனவும் எச்சரிக்கைச் செய்கின்றது. இதன் மூலம் பலம் வாய்ந்த ஒரு சமுதாயத்தையும், ஈமானிய சமுதாயத்தையும் ஒற்றுமையை வளர்ப்பதுவுமே இதன் குறிக்கோளாகும். இது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.

இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது இதன் உண்மை நிலையை அறிந்துக் கொள்ளலாம். நபி (ஸ்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முன்னிருந்த அக்கால அரேபியர்கள் எந்த முறையில் வாழ்ந்து  கொண்டிருந்தார்கள்? புனிதமான அந்நகரில் அவர்களுக்கு மத்தியில் கோத்திர வெறி தலைவிரித்தாடியது! கோத்திரங்களுக்கிடையில் வருடக்கணக்காக சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள்! வாழையடி வாழையாக அதனைத் தொடர்ந்து செய்துகொண்டே வந்தார்கள். அடிமை, எஜமான் என்ற பாகுபாடு அதிகமாக காணப்பட்டன! எஜமானர்களோ தங்களது அடிமைகளை தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடத்தினார்கள். நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம், மொழிக்கு மொழி, கோத்திரத்திற்கு கோத்திரம், இனத்திற்கு இனம், நிறத்திற்கு நிறம் என்றெல்லாம் பலவிதமான பாகுபாடுகளுடன் வாழ்ந்து வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்ட பிறகு இஸ்லாம் இவை அனைத்திற்குமே முற்றுப்புள்ளி வைத்தது. அல்-குர்ஆன் அருளப்பட்டது! ஈமானிய ஒளி பிரகாசித்தது! நபி (ஸல்) அவர்கள் இதன் மூலம் அச்சமுதாய மக்களின் உள்ளத்துக்கு தெளிவுபடுத்தினார்கள். அவர்களுக்கு சிறந்த அறிவைக்கொண்டு நேர்வழியை அடைவதற்குரிய வழிமுறையைக் காட்டினார்கள். இதனால் அவர்களது உள்ளங்கள் அமைதி பெற்றன. இறைவிசுவாசம் என்ற ஒரே கோட்பாட்டின் கீழ் அவர்கள் ஒன்றினைந்தார்கள். அனைத்து வேற்றுமைகளில் இருந்தும் நீங்கிக்கொண்டார்கள். கோத்திர வெறி மற்றும் உலக ஆசைகள் இவைபோன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பகரமாக ஈமானிய சகோதரத்துவத்தை உருவாக்கினார்கள். அதே கோட்பாட்டின் கீழ் அனைவருமே ஒன்றினைந்து செயற்பட்டார்கள்! இதனால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வல்லரசை ஏற்படுத்துகின்ற அளவிற்கு மிகப்பெரும் வெற்றியையும் பெற்றார்கள்!

இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்!

(1) இஸ்லாம் சகோதரத்துவத்தை இறைவிசுவாசத்துடன் இணைத்துக் கூறுகின்றது. இரண்டு சகோதரர்களுக்கு மத்தியில் பிணக்கு ஏற்பட்டால் அதனைத் தீர்த்து வைக்கவும் கட்டளையிடுகின்றது (அல்-குர்ஆன் 49:10).

இந்த வசனம் நமக்கு எதனைப் போதிக்கின்றது? இறைவிசுவாசிகள் அனைவருமே சகோதரர்கள் என்பதன் மூலம் சகோதரத்துவத்தைத் தூண்டக்கூடியதாகவும், சகோதரத்திற்கு களங்கம் ஏற்படுகின்ற விசயங்கள் நடந்துவிட்டாலும் அதைத் தீர்த்து வைக்கவும் ஏவுவதன் மூலம் சகோதரத்துவம் மென்மேலும் உருவாகும் என்பதனை இவ்வசனம் தெளிவுபடுத்துகின்றது. நபித்தோழர்களது வாழ்க்கையும் இவ்வாறே அமைந்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் தனது தோழர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் வருகின்ற போது அவ்வப்போது அவற்றை தீர்த்துவைத்து ஒற்றுமையாக்கியிருக்கின்றார்கள். இதனால் தான் மூன்று நாட்களுக்கு மேல் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுடன் பேசாமல் இருப்பதைக் கூட இஸ்லாம் தடை செய்திருக்கின்றது.

(2) ஒரு முஃமின் இன்னொரு முஃமினை நேசிப்பதற்கும் இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்).

நமது முஸ்லிம் சமூகத்தில் தற்போது நிலவுகின்ற ஒற்றுமை இன்மைக்கும் அதனால் நமது சமூகம் பல பிரிவுகளாகப் பிரிந்து சின்னாபின்னமாகப் போயிருப்பதற்கும் தற்காலத்தில் மிக முக்கிய காரணமாக அமைவது இந்த நபிமொழியில் அடங்கியிருக்கின்ற மிகக்கடுமையான எச்சரிக்கையை அலட்சியம் செய்து அதற்கு மாற்றமாக நடப்பதுவேயாகும் என்றால் அது மிகையாகாது!

ஒருவன் தனது வாழ்வில் முன்னேறிச் செல்கின்றபோது இன்னொருவன் அதனைப் பார்த்துப் பொறாமைக் கொள்ளக் கூடியவனாகவும் அவனது முன்னேற்றத்தை தடைச் செய்வதற்கும் முயற்சிக்கின்றான். இதனால், மேற்கண்ட நபிமொழியில் கூறப்பட்ட, இஸ்லாம் கூறும் சகோதரத்துவத்தை பின்பற்றாததால், தான் விரும்பக்கூடிய, ‘வாழ்க்கையில் முன்னேறுவதை’ இன்னொரு சகோதரனும் அடைவதை விரும்பாததால், அவன் துன்பப்படுவதைக் கண்டு இவன் இன்பமடைவதால் அங்கு பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன. இதனால் தான் ஒரு பிரச்சனையின் ஆரம்பத்தையே இஸ்லாம் தடுத்து சகோதரத்துவத்தை விரும்பக்கூடிய விசயங்களை ஊக்குவிக்கின்றது.

(3) எப்படிப்பட்ட விசயங்களுக்காக சகோதரத்துவ நட்பு வைக்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுத்தருகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்காகவே ஒருவனை வெறுத்து நடங்கள்’ (ஆதாரம் : அஹ்மத்)

அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்வதென்றால், நேசிப்பதென்றால் என்ன?

ஒன்றாகப் பழகும் சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கக்கூடியவாறு நல்லுபதேசங்களைச் செய்துகொள்ள வேண்டும்.  இவ்வாறு நட்பாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்கின்றபோது வணக்கவழிபாடுகளைப் புறக்கணிக்கின்ற போது மற்றவர் அச்சகோதரனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவன் அவற்றை அலட்சியப்படுத்துகின்றபோது, நல்லுபதேசங்களைக் கேட்காதபோது, அவற்றை அவர் ஏற்று செயல்படுத்தும் வரை அவரை அல்லாஹ்வுக்காக வெறுத்து நடக்கவேண்டும்.

(4) இஸ்லாம் இனம், நாடு, நிறம், சாதி, மொழி ஆகியவற்றுக்கிடையே எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை! மாறாக ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட இவர்கள் அனைவரையும் ‘முஸ்லிம்கள்’ என்றே பார்க்கின்றது. இவற்றை நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்களது வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறியலாம். பிலால் (ரலி) அவர்களைப் பொருத்தவரையில் ஒரு மிகப்பெரும் குரைசிக்குலத் தலைவனுக்கு அடிமையாக வாழ்ந்தவர். மேலும் அவர் கருமை நிறமுடையவராக இருப்பதோடு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவரும் ஆவார். நபி (ஸல்) அவர்களோ அல்லது நபித்தோழர்களோ அவரை ஒருபோதும் பிரித்துப்பார்க்கவில்லை! மாறாக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சகோதரர்கள் என்றகையில் அக்கால நபித்தோழர்களுக்கு மத்தியில் ஒற்றுமை இருந்தது.  இதனால் இவர் அபூபக்கர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்டார்கள். உலகிலேயே இரண்டாவது தரத்தில் இருக்கின்ற அல்-மஸ்ஜிதுல் நபவியில் முஅத்தினாக இருந்தார். மக்கா வெற்றியின் போது பெரும் பெரும் நபித்தோழர்கள் மக்காவிலே இருக்கின்ற சந்தர்ப்பத்திலே யாரை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்ப்பார்த்திருந்தபோது ஆரம்பத்திலே அடிமையாகவும், நிறத்திலே கருமையாகவும் இருந்த பிலால் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்குள்ளே அழைத்துச் சென்றார்கள். இவைகள் அனைத்துமே, இஸ்லாம் சகோதரத்துவத்திற்கு பாகுபாடு காட்டுவதில்லை என்பதையே உணர்த்துகின்றது.  இதே போன்று ஏராளமான நிகழ்வுகள் நடந்திருப்பதையும் இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது விளங்கிக்கொள்ளலாம்.

மக்களுக்கு மத்தியில் இருக்கும் குலங்களும் கோத்திரங்களும் அவர்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் அறிந்துக்கொள்வதற்காகவே என்று இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. அவர்களுக்கு மத்தியில் எவ்வித உயர்வு தாழ்வு கிடையாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.

“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 49:13)

இந்த அல்-குர்ஆன் வசனம், அல்லாஹ் மனிதனை ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து படைத்தான் என்பதன் மூலம் அனைத்துப் பாகுபாடுகளையும் ஆரம்பத்திலேயே தடுக்கின்றது. வசனத்தின் இறுதியில் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர் யார் என்பதற்கு ஒரு அளவு கோலையும் தருகின்றது. அவர்களே அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர்! அவர்கள் தான் இறையச்சமுடையவர்கள். தற்போது உலகில் பெரும் பிரச்சனையாக கருப்பர், வெள்ளையர் பிரச்சனை இருப்பதை தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் அறியலாம். அதே போன்று சாதிப்பிரச்சனைகள் பல இயங்களிலும்  ஊடுருவி இருப்பதை பார்க்கலாம். இவைகள் அனைத்துக்கும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

‘அரபிக்கும் அஜமிக்கும், அஜமிக்கும் அரபிக்கும் மத்தியிலும் கருப்பனுக்கும் வெள்ளையனுக்கும் வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும் மத்தியிலும் வித்தியாசங்கள் கிடையாது. அனைவருமே ஆதமில் இருந்து வந்தவர்கள்; ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர்’ (ஆதாரம் : அஹ்மத்)

இவ்வாறாக இன, நிற, இட, தேச, மொழி என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் இஸ்லாம் சகோதரத்துவத்தை முக்கியப்படுத்தி வலியுறுத்துவதை அறியலாம்.

கஹடோவிடயில் வெள்ள அபாயம் - May 18, 2010 by Media Voice Of Kahatowita

. கம்பகா மாவட்டத்திலும் கொழும்பிலும் பெய்யும் தொடர் மழையால் அன்றாட வேலைக்கு மக்கள் சிரமப்பட்டுவருகிறார்கள். தொடரும் மழையால் மீண்டும் கஹடோவிடயில் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.நேற்று ஏற்பட்ட மின் துண்டிப்பும் இன்னும் தொடர்வதால் சிரமங்கள் அதிகமாகியுள்ளன. நிலமை சீராக இறைவனைப் பிரார்த்திப்போம்

விழிப்புணர்வுக் குழுவின் அடுத்த அமர்வு 22ஆம் திகதி - May 14, 2010 by Media Voice Of Kahatowita
ஊரில் கட்டுக்கோப்புடன் கூடிய சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கில் பள்ளிவாயில்களை மையமாக வைத்து ஏற்பாடு செய்யப்படவிருக்கின்ற விழிப்புணர்வுக் குழுவின் அடுத்த அமர்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதெனத் தெரிய வருகின்றது. கடைசியாக நடைபெற்ற கூட்டத்தில் மேலும் விரிவாக விடயங்கள் ஆராயப்பட்டதாகவும் அடுத்த கூட்டத்தில் நிர்வாகமொன்றை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த அமர்வுகளை ஏற்பாடு செய்தவர்கள் அடுத்த கூட்டத்தின் போது கட்டாயமாக நிர்வாகமொன்று தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதில் மிக கண்டிப்புடன் இருக்கின்றனர்.
Dr. ஸாகிர் நாயக் இலங்கை வருகை - May 11, 2010 by Media Voice Of Kahatowita
இஸ்லாமிய மார்க்க அறிஞரும் பேராசிரியருமான ஸாகிர் நாயக் அவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இஸ்லாத்தைப்பற்றி விஞ்ஞான ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் மாற்று மதத்தவரிடையே பிரச்சாரம் செய்து வருகின்ற சமகால அறிஞர்களில் Dr. ஸாகிர் நாயக் அவர்கள் முக்கியமானவராவார். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2010.05.23 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் 9.00 மணிவரை அவரது உரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம் பெறவிருக்கின்றது. அல்லாஹ் இருக்கின்றான் என்பதை தர்க்க ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் நிறுவுகின்ற தலைப்பில் அவரது உரை அமையவிருக்கின்றது என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். முடிந்தவரை மாற்று மத நண்பர்களை அழைத்து வருமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெண்களுக்கான பிரத்தியேக இடவசதியும்  ஏற்பாடு செய்யப்படவிருக்கின்றது.
ஜனாஸா அறிவித்தல் - May 10, 2010 by Media Voice Of Kahatowita
கஹடோவிடவைச் சேர்ந்த A.R.S. ஹமீட் காலமானார். அன்னார் ரிஹானா, சியாட் (அஷபா), சியாம், ரம்ஸானியா ஆகியோரின் தந்தையும் பஸ்லி(திஹாரிய), இக்பால் நாஸர் (ஆசிரியர்) ஆகியோரின்  மாமனாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று (2010.05.10) மு.ப. 11.00 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தொலைபேசி இலக்கங்களால் மரணம் - May 8, 2010 by Media Voice Of Kahatowita

பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்ற பெயரில் ஒருகுறு நகல் பரப்பப்பட்டு வருகிறது.அந்தச் செய்தியில் சில தொலைபேசிஇலக்கங்களும் அவைகள் சிவப்பு நிறத்தில் வருவதாகவும் அவைகளுக்கு பதில்அளித்தவர்களில் 27 நபர்கள் மரணித்துவிட்டதாகவும் அதில்இடம்பெற்றிருந்தது.இதனால் பலர் பீதியடைந்து தொலைபேசிகளை ஓப் செய்துள்ளனர்.

உண்மையில் இச்செய்தியில் எந்த உண்மையும் கிடையாது.தொலை பேசிவலையமைப்பாலர்களுக்கு பணம் ஈட்டிக் கொடுக்கும் வேலைகளில் ஒன்றாகவே உள்ளது.தொலைபேசிகளின் ஓசை அலை வேகம் மாற எந்த வாய்ப்பும் இல்லை.மாறுமாயின்தொலைபேசிகளுக்கான அலையுமல்ல.இப்படிப் பொய்யான செய்திகளை உருவாக்கி பரப்பிசந்தோசம் அடைபவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும்.அதே நேரம் இந்த செய்திகிடைத்தவர்;கள் அவைகளைப் பற்றி உறுதிப்படுத்திக் கொள்ளாமல் அச்சத்தைப்பரப்புவது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.


وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِوَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْلَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنْبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُاللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّاقَلِيلًا النساء : 83

‘பாதுகாப்பு அல்லது பயம் பற்றியசெய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதை பரப்பி விடுகின்றனர்.அதைஇத்தூதரிடமும் தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் அதைஅவர்களிடமிருந்து ஆய்ந்து எடுப்போர் அறிந்து கொள்வார்கள்.அல்லாஹ்வின்அருளும் அவனது அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் சிலரைத் தவிர(மற்றவர்கள் ) சைத்தானைப் பின்பற்றி இருப்பீர்கள் (நிஸா:83) என்று அல்லாஹ் தவறான செய்திகளை பரப்புவதை எச்சரிக்கிறான்.

அவ்வாறான செய்திகளை பொறுப்பானவர்களிடம் கொடுத்து விசாரிப்பதை வழிமுறையாகச் சொல்கிறான்.

தயவு செய்து இது மாதிறி விடயங்களை இதன் பிறகாவது தீர விசாரிக்காமல்பரப்புவதைத் தவிர்ப்பதுதான் மார்க்க ரீதியான அணுகுமுறை என்பதை அனைவரும்நன்குணர்ந்து கொள்ள வேண்டும்.

மைலோ கிண்ண உதைபந்தாட்டத்தில் மாவட்ட மட்டத்திற்கு அல்பத்ரியா தெரிவு - May 8, 2010 by Media Voice Of Kahatowita
மைலோ  வெற்றிக் கிண்ணத்திற்காக நாடளாவிய ரீதியில் நடாத்தப்படுகின்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் கம்பஹா வலய பாடசாலைகளுக்கிடையில் அல்பத்ரியா செம்பியனானது தெரிந்ததே. இரண்டாம் கட்டமாக மாவட்ட ரீதியிலான இறுதிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக அல்பத்ரியா அணி இன்று கொழும்பு சென்றுள்ளது. இத்தொடரில் கம்பகா மாவட்டத்தின் பிரபல 4 பாடசாலைகளுடன் மோதவிருக்கின்றது. மாணவர்கள் திறமை காட்டிய போதும் பாடசாலை மட்டத்திலோ ஊர் மட்டத்திலோ போதிய ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த அணி வெற்றியுடன் திரும்ப எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
ஜனானஸா அறிவித்தல் - May 8, 2010 by Media Voice Of Kahatowita

ஒகொடபொலயைச் சேர்ந்த அல்ஹாஜ் ஈ எல் எம் மகீன் காலமானானர் அன்னார் காலஞ் சென்ற ஆயிசா உம்மாவின் கனவரும் ஜிப்ரி நாஸிர் நிஸார் ராஸிக் பரீத் அல்ஹாஜ் முஹம்மத் அல்ஹாஜ் நஈம் ரிஸ்மி ஐனுல் மர்லியா காலஞ் சென்ற நியாஸ் ஆகியோரின் தகப்பனாரும் அஹ்மத் சஹீத் அவர்களின் சகோதரரும் மன்சூரின் மாமனாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா இன்று (8.5.2010) காலை 9 மணிக்கு ஒகடபொல மஸ்ஜிதுல் பலாஹ் ஜம்ஆப் பள்ளிவாயல் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


« old entrys
Daily hadees
------
Recent Comments