Daily Quran
--------
Visitors
Free counters!
http://lankaenews.lk/image/dewaena.gif
Month: November 2009
SEDO ஏற்பாட்டில் கூட்டுக் குர்பானி - November 21, 2009 by Media Voice Of Kahatowita

கஹட்டோவிட்டாவின் வரலாற்றில் முதன் முறையாக இம்முறை ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஊரில் பெரும்பாலானவர்களின் பங்களிப்புடன் முஹியித்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் கூட்டுக் குர்பானி ஏற்பாடு செய்யப்படவுள்ளது. ஊர் மக்கள் சொந்தமாக வழங்கும் குர்பானிக்கான பிராணிகளும் வெளியிடங்களில் இருந்து தனவந்தர்கள் வழங்கும் பிராணிகளும் பெருநாள் தினத்தன்று குர்பானி கொடுக்கப்படவுள்ளன. SEDO நிறுவனத்தின் நீண்ட நாள் முயற்சி இம்முறை கைகூடவுள்ளதாக அங்கத்தவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக SEDO கலாச்சார நிலையத்தில் “இம்முறை ஹஜ் பெருநாளும் ஊர் ஒற்றுமையும்” என்ற தலைப்பில் கடந்த வாரம் சொற்பொழிவொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. SEDO நிறுவனத்தின் அயராத முயற்சியால் முஹியித்தீன் ஜூம்ஆப் பள்ளி மஸ்ஜிதுன்னூர் உற்பட மேலும் சில அமைப்புகளை ஒற்றுமைப்பட வைத்ததாக அங்கத்தவர்கள் தெரிவித்தனர். இதற்கான கூடுதலான பங்களிப்பை தமது அமைப்பு வழங்குவதாகவும் இதே போன்று இன்னும் பல பணிகளை அனைவரையும் இணைத்தக் கொண்டு முன்னின்று செய்யப் போவதாகவும் SEDO அங்கத்தவர்கள் தெரிவித்தனர்.

- November 13, 2009 by Media Voice Of Kahatowita


இவ்வாண்டு ஹஜ் பயணம் ஆரம்பம்

இவ்வாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இவங்கையிலிருந்து மக்கள் புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்துள்ளனர். கஹட்டோவிட்டவிலிருந்து 10க்கும் மேற்பட்டவர்கள் இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் தயாராகியுள்ளனர். அவர்களில் சிலர் ஏற்கனNவு புனித மக்காவுக்குச் சென்றுள்ளதோடு ஏனையோர் இன்னும் ஒருசில தினங்களில் புறப்படவுள்ளனர். அவர்களது பிரயாணம் சிறப்பாக அமையவும் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைவதற்கும் அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்.
- November 11, 2009 by Media Voice Of Kahatowita

குட்டி ஆறு பாலம் போக்குவரத்துக்கு திறப்பு

கஹட்டோவிட்டவையும் நாகொடையையும் இணைக்கின்ற அத்தனகல்ல ஓயாவின் கிளையான குட்டி ஆற்று (ஓடை) க்குக் குறுக்காக புதிதாக அமைக்கப்பட்ட பாலம் அண்மையில் மக்களது பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிட்டம்புவ பிராந்திய பொறியியலாளர் ஜனாப் நாகூர் பிச்சையின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்ட இப்பாலத்தை பாராளுமன்ற உறுப்பினரும் அத்தனபல்ல தொகுதி ஸ்ரீ.ல.சு.க. அமைப்பாளருமான திரு. சரண குணவர்தன திறந்து வைத்தார். பொறியியலாளர் ஜனாப் நாகூர் பிச்சை அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

- November 7, 2009 by Media Voice Of Kahatowita
கஹடோவிட சம்பந்தமான மார்க்க உலக விவகார கருத்து முன்வைப்புகள் விமர்சனங்களுக்கான ஓர் தளம்
Daily hadees
------
Recent Comments