டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம் -
July 5, 2010 by
Media Voice Of Kahatowita

வேகமாகப் பரவி வருகின்ற டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக அத்தனகல்ல பிரதேச செயலகம் மூலமாக தரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் கஹடோவிடவில் உள்ள இரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் வசிக்கின்ற மக்களை அறிவுறுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டள்ளது. வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதோடு நீர் நிரம்பி நிற்கக் கூடிய அனைத்து பொருட்களையும் அப்புறப்படத்தமாறு பள்ளிவாசல்களுடாக கிராம சேவை அலுவலர்கள் மக்களுக்கான அறிவித்தல்களை விடுத்தள்ளதோடு அதிகாரிகள் இவற்றைப் பரீட்சிக்க வருவதாகவம் அறிவித்துள்ளனர்.
சுற்றுச் சூழலை அசுத்தமாக வைத்திருப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதோடு குற்றப்பணமும் அறவிடப்படும் எனவம் தெரிவிக்கப்படுகின்றது.
ஊர் மக்கள் அனைவரும் இந்த நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் துன்பங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்.